search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்யாசாகர்"

    • மீரா மஹதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • வித்யாசாகர் இசையில் இப்படம்  வெளியானது.

    இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படம்  வெளியானது.

    மேலும் இப்படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான 'டபுள் டக்கர்' ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது.

    பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது.

    • நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    90-ஸ் மற்றும் 2000-வது காலகட்டங்களில் வெளியான ஜெய்ஹிந்த், கில்லி, தூள், ரன், சந்திரமுகி, அன்பே சிவம், இயற்கை, சுள்ளான், வில்லன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

    படங்களின் வெற்றி தோல்வியை கடந்து இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் ஹிட் அடிக்கும். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

     


    மகதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட் முதன்மை வேடங்களில் நடித்துள்ள புதிய படம் 'டபுள் டக்கர்.' இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் யூடியூபில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் அந்த கட்சி தான் முக கவசம் வழங்க வேண்டும்.
    • நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா பாதிப்பால் அவர் இறக்கவில்லை.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து 4 மணி நேரம் நின்று பொதுமக்களுக்கு 50 ஆயிரம் முக கவசங்களை இலவசமாக வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க முக கவசங்கள் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூட்டம் எங்கு கூடினாலும் அங்கு முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் அந்த கட்சி தான் முக கவசம் வழங்க வேண்டும். அவர்களது கட்சிக்காரர்களை அவர்கள்தான் பாதுகாக்க வேண்டும்.

    நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா பாதிப்பால் அவர் இறக்கவில்லை.

    மீனாவின் கணவருக்கு கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் இருந்தார். டிசம்பர் மாதம் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். 6 மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார்.

    அவருக்கு இருதயம், நுரையீரல் ஆகிய இரு உறுப்புகளும் செயல் இழந்து விட்டது. 95 நாட்கள் சுயநினைவின்றி எக்மோ சிகிச்சையில் இருந்தார்.

    15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன்.

    அவரது நிலைமை மோசமாகவே இருந்தது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு யாராவது தானம் செய்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்தியா முழுவதும் அவருக்கான உடல் உறுப்பு எந்த ஊரிலும் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா, பெங்களூர் உள்பட பல இடங்களில் சொல்லி வைத்திருந்தோம். ஆனாலும் அவரது ரத்த வகை பொருந்தவில்லை.

    முதல்-அமைச்சர் உள்பட நாங்கள் எல்லோரும் அவரை காப்பாற்ற நிறைய முயற்சி செய்தோம்.

    தமிழக அரசு எவ்வளவோ முயற்சித்தும் மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் வருகிற 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாகவும் சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரூவைச் சேர்ந்த வித்யாசாகர் திருமணத்திற்குப் பிறகு மீனாவுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது.

    சென்னை:

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். நேற்று இவர் காலமானார். அவருக்கு வயது 48.

    மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.

    அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போய் உள்ளது.

    மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்படபல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அவரது குடும்ப நண்பர்கள் சிலர் 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணத்திற்கு சொல்லும் காரணம் அதிர வைத்திருக்கின்றன.

    பெங்களூரூவைச் சேர்ந்த வித்யாசாகர் திருமணத்திற்குப் பிறகு மீனாவுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது. இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு பெங்களூருவிலேயே தங்கியிருந்தார். பெங்களூருவில் இவர்கள் வாழும் வீட்டுக்குப் பக்கத்தில் அதிக அளவில் புறா வளர்க்கப்பட்டு வந்ததாகவும் இந்த புறாக்களின் எச்சத்தின் மீது பட்டு வீசும் காற்றை தொடர்ந்து அவர் சுவாசித்ததன் காரணமாக வித்யாசாகருக்கு புதிய தொற்று பரவி நுரையீரலை அதிக அளவில் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட வித்யாசாகர் ஆழ்வார்பேட்டை பகுதியிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

    அப்போதுதான் இரண்டு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. இதற்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில்தான் இரண்டு நுரையீரலைத் தொடர்ந்து சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. வித்யாசாகரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடியிருக்கிறார்கள். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரைப்பட நடிகையும், என் குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா, நைனிகாவும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்'' என கூறியுள்ளார்.

    நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் அன்புக்குரிய தோழி மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்துபோன தகவலோடு எழுந்திருக்கிறேன். நீண்டகாலமாக நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் இப்போது உயிரோடு எங்களுடன் இல்லை என்பது பயங்கரமாக இருக்கிறது. மீனாவுக்கும், அவரது மகள் நைனிகாவுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மீனாவின் குடும்பத்தின் துயரச் செய்தியோடு இன்று காலை விடிந்தது. அவர்களது குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடிகை மீனா எப்போதும் மங்களகரமான முகத்துடன் குடும்பத் தலைவி போன்ற கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தோற்றத்தில் இருப்பார். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் அனைத்து ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். 90களின் முன்னனி நடிகையாக இருந்தவர் தற்போது வரைக்கும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×