search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் அடித்து கொலை"

    • இரும்பு ராடால் சரமாரி தாக்குதல்
    • கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி ஆண்டிபட்டி அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா என்பவருக்கும் வைகை நகரை சேர்ந்த கவின் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே நிவேதா தனது குழந்தையுடன் தர்மராஜ புரத்தில் உள்ள தந்ைத வீட்டிற்கு வந்து விட்டார். இதனைத் தொடர்ந்து கவின் மற்றும் அவரது பெற்றோர் தர்மராஜபுரத்துக்கு சென்று எனது குழந்தையை எப்படி தூக்கிவரலாம் என தகராறு செய்தனர். மேலும் குழந்தை யை தூக்கிக்கொண்டு வைகை நகருக்கு வந்து விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நிவேதாவின் தந்தை ஜெய க்குமார் மற்றும் உறவினர்கள் மீண்டும் வைகை நகருக்கு வந்து குழந்தையை எடுத்துச் செல்ல வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்ட னர்.

    இதில் கவினின் உறவின ர்களான சின்னமனூர் ஓவுலாபுரம் இந்திரா காலனியை சேர்ந்த நல்லசாமி (வயது28), சிலம்பரசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டனர்.

    நல்லசாமி நிலைமை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். அதன் பேரில் ஜெயக்கு மாரின் மனைவி செல்வி, மகன் கோகுல் மற்றும் தாய் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ள்ளது.

    இதபோல் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன், கவிதா, கவின், பிரசாந்த், நிஷாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திண்டுக்கல் - பழனி ரோடு லாரிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி இரவு நேரங்களில் லாரிப்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து ஏராளமானோர் மது குடித்து வருகின்றனர்.
    • குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - பழனி ரோடு லாரிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி இரவு நேரங்களில் லாரிப்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து ஏராளமானோர் மது குடித்து வருகின்றனர்.

    நேற்று இரவு அவர்க ளுக்குள் ஏற்பட்ட தகராறில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உருட்டு க்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை. கொலையாளி களும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு கொலை சம்பவம் நடந்த நிலையில் இது வரை அவர் யார்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.

    திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி பார்கள் செய ல்பட்டு வருகின்றன. அதே போல்தான் லாரிப்பேட்டை பகுதியிலும் இரவு 11 மணி வரை கும்பல் கும்பலாக அமர்ந்து மது குடித்து வருவது தினசரி சம்பவமாக நடந்து வருகிறது.

    இது போன்ற சம்பவங்க ளால் போதையில் தகராறு ஏற்பட்டு அவர்களுக்குள் ேமாதிக் கொள்வதும் கொலையில் முடிவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏர்போர்ட் நகரில் திறந்தவெளியில் மது குடித்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்ய ப்பட்டார்.

    அனுமந்தராயன்–்கோட்டையிலும், சுடுகாட்டில் மது குடித்தவர் படுகொலை செய்ய ப்பட்டார். திண்டுக்கல் பாரதிபுரம் மின் மயானம் பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்கள் கும்மாளமிட்டு வரும் நிலையில் அடிக்கடி அங்கு கொலை சம்பவங்க ளும் நடந்து வருகிறது. எனவே திறந்தவெளி பார்களை போலீசார் கண்காணித்து அங்கு இரவு நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடை அருகே பல்வேறு இடங்களில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர்.

    ×