search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தகராறில் வாலிபர் அடித்து கொலை; தேனியில் பரபரப்பு!
    X

    கோப்பு படம்

    குடும்பத்தகராறில் வாலிபர் அடித்து கொலை; தேனியில் பரபரப்பு!

    தேனி ஆண்டிபட்டி அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா என்பவருக்கும் வைகை நகரை சேர்ந்த கவின் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே நிவேதா தனது குழந்தையுடன் தர்மராஜ புரத்தில் உள்ள தந்ைத வீட்டிற்கு வந்து விட்டார். இதனைத் தொடர்ந்து கவின் மற்றும் அவரது பெற்றோர் தர்மராஜபுரத்துக்கு சென்று எனது குழந்தையை எப்படி தூக்கிவரலாம் என தகராறு செய்தனர். மேலும் குழந்தை யை தூக்கிக்கொண்டு வைகை நகருக்கு வந்து விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நிவேதாவின் தந்தை ஜெய க்குமார் மற்றும் உறவினர்கள் மீண்டும் வைகை நகருக்கு வந்து குழந்தையை எடுத்துச் செல்ல வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்ட னர்.

    இதில் கவினின் உறவின ர்களான சின்னமனூர் ஓவுலாபுரம் இந்திரா காலனியை சேர்ந்த நல்லசாமி (வயது28), சிலம்பரசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டனர்.

    நல்லசாமி நிலைமை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். அதன் பேரில் ஜெயக்கு மாரின் மனைவி செல்வி, மகன் கோகுல் மற்றும் தாய் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ள்ளது.

    இதபோல் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன், கவிதா, கவின், பிரசாந்த், நிஷாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×