search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானம்"

    • வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
    • தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் இந்த மழை நீடித்தது. மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தொடர்ந்து மழை விட்டாலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்று சூழ்நிலை தற்போது நிலவுகிறது. மழையால் தஞ்சையில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

    • லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
    • கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த போதிய அளவு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை குறிப்பு விவரம் வருமாறு:-

    மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை 36 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.திருப்பூரில் வரும் வாரம் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு.சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலான வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

    தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த வாய்ப்புள்ளது. போதிய அளவு சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது.
    • நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வந்தது. புயல் கரையை கடப்பதற்கு முந்தைய நாள் கடுமையான குளிர் காற்று வீசியது. ஆனால் போதிய மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. காலை 9 மணி அளவில் மிதமான மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் வரை மழை நீடித்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இம்முறை கனமழையாக கொட்டியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது.

    சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று இரவிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் வல்லம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்தது.

    ×