என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழுக்கி விழுந்து"
- மாடிப்படியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தபோது தறிபட்டறை தொழிலாளி வழுக்கி கீழே விழுந்தார்.
- இதில் அவரது தலையின் பின் பகுதியில் அடிப்பட்டதில், காதில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள லக்காபுரம், சுப்பராய வலசு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (55). இவரது மனைவி பேபி (50). இருவரும் லக்காபுரத்தில் உள்ள தறிப்பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து பேபி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது முதல் தளத்தில் உள்ள தங்களது வீட்டில் இருந்து கிருஷ்ணமூர்த்தி இறங்கி வந்துள்ளார். அப்போது மாடிப்படியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தபோது வழுக்கி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையின் பின் பகுதியில் அடிப்பட்டதில், காதில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயில்சாமி உயிரிழந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
- இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் மாரநாயக்கர். இவரது மனைவி சரோஜா (56). இவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.
இதனால் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் உள்ள அவரது அக்கா பாப்பாத்தி வீட்டில் சரோஜா தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சரோஜா கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்