search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after slipping"

    • மாடிப்படியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தபோது தறிபட்டறை தொழிலாளி வழுக்கி கீழே விழுந்தார்.
    • இதில் அவரது தலையின் பின் பகுதியில் அடிப்பட்டதில், காதில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரம், சுப்பராய வலசு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (55). இவரது மனைவி பேபி (50). இருவரும் லக்காபுரத்தில் உள்ள தறிப்பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து பேபி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது முதல் தளத்தில் உள்ள தங்களது வீட்டில் இருந்து கிருஷ்ணமூர்த்தி இறங்கி வந்துள்ளார். அப்போது மாடிப்படியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தபோது வழுக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவரது தலையின் பின் பகுதியில் அடிப்பட்டதில், காதில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயில்சாமி உயிரிழந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அருகே உள்ள கூகலூர், மனுவக்காடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவர், நாகர்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×