search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளியல் அறையில் வழுக்கி விழுந்த துப்புரவுத் தொழிலாளி சாவு
    X

    குளியல் அறையில் வழுக்கி விழுந்த துப்புரவுத் தொழிலாளி சாவு

    • சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அருகே உள்ள கூகலூர், மனுவக்காடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவர், நாகர்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×