search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில பெண்"

    • நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
    • ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகின்றது.

    சென்னிமலை:

    ஒடிசா மாநிலம், மதுபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பெகரா. இவரது மனைவி நர்மதா பெகரா (30). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் இவரது தாயார் ஜீனுராணி, தங்கை பங்கஜனி பெகரா ஆகியோர் ஈங்கூர் எல்.ஐ.சி. காலனி, சக்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

    இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் இருந்து மனைவி நர்மதா பெகரா தனது கைக்குழந்தையுடன் வந்து கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நர்மதா பெகரா தனது குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்தார்.

    வெளியே சென்றிருந்த கணவர் ரஞ்சித் மதியம் வீட்டிற்கு வந்த போது மனைவி நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு ஈங்கூர் தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நர்மதா பெகரா இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகின்றது.

    • குடிபோதையில் கணவர் வெறிச்செயல்
    • கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் குளத்தின் அருகே செங்கல்சூளை உள்ளது .

    மிஷின் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் இந்த செங்கல் சூளையை நடத்தி வருகிறார். இங்கு 4 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் மேற்கு வங்காளம் மாநிலம் போல் பூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி (வயது 29) என்பவர் கணவர் டெபுராய் மற்றும் 9 வயது மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று அவர்கள் வேலை செய்து விட்டு வீட்டில் படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை வசந்தி, தனது வீட்டில் காயங்களோடு பிணமாக கிடந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவர்கள் செங்கல் சூளை உரிமையாளர் சசிக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சம்பவ இடம் வந்து பார்த்து விட்டு, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தியின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்குஅனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து டெபுராயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது 9 வயது மகனிடம் விசாரித்த போது, இரவில் மது அருந்தி விட்டு வந்த டெபுராய்க்கும், வசந்திக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரம் அடைந்த டெபுராய் கம்பால் வசந்தியை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து டெபுராயை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு வசந்தி, 3-வது மனைவி என்பதும் வசந்திக்கு, டெபுராய் 2-வது கணவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 9 வயது மகன், வசந்தியின் முதல் கணவருக்கு பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் டெபுராய், குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் தற்போது அவர் மனைவியை கொலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வசந்தியின் உடலில் பல்லால் கடித்த காயங்களும் இருப்பதாக தெரிகிறது. எனவே டெபுராய் குடிபோதையில் மனைவியை கடித்தாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுபற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சூளையில் வேலை பார்த்து வரும் பொறி என்பவரது மனைவி தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடையம் அருகே உள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி என்பவரது மனைவி தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடையம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கோவிந்தபேரி, மாதாபுரம், செக்போஸ்ட் என பல்வேறு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வரும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சிக்கன், மட்டன் என கறி விருந்து நடைபெற்றது. மேலும் பலவண்ண மின் விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவைகளை அங்கு கட்டி திருவிழா போல் அமைத்திருந்தனர். வளைகாப்புக்கு பின்னர் வடமாநில தொழிலாளர்கள் நடனம் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து வடமாநில தொழிலாளி பொறி கூறுகையில், நான் தமிழகம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. இங்கேயே வேலை பார்த்து வருகிறேன். தற்போது எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இங்கு மிகவும் சந்தோஷமாக வளைகாப்பு விழா கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது இங்கு சுதந்திரமாக நடந்த வளைகாப்பு விழா அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செங்கல் சூளை உரிமையாளர் பாலமுருகன் செய்திருந்தார்.

    ×