search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர் கைது"

    • சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவரது மகன் ஆனந்தராஜ் (27).

    இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியின் தங்கையை ஆசை வார்த்தை கூறி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த டேனீஸ்பேட்டை ஊராட்சி லோகூர் வனப்பகுதிக்கு அழைத்து வந்து கற்பழித்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    • ரோகிணியின் தந்தை சஞ்சீவி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • திருமணமாகி 5 ஆண்டு ஆனதால், சேலம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

    சேலம்:

    சேலம், கருப்பூர் அடுத்த மாங்குப்பை, பழையூர் சத்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவர் அழகாபுரம், பிருந்தாவன் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி ரோகிணி (30). இவர்களது மகன் குபேந்திரன் (3).

    இந்த நிலையில், பிரகாஷ் தனது வீடு அருகே உள்ள ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசுவதோடு, குறுந்தகவல் அனுப்பி வந்தார். அதை ரோகிணி கண்டித்ததால் தம்பதி இடையே ஓராண்டாக பிரச்சினை இருந்தது. 10 நாட்களுக்கு முன்பு பிரகாஷிடம் கோபித்துக்கொண்டு, அவரது மனைவி, தாய் வீட்டுக்கு சென்றார்.

    அவரை சமாதானப்படுத்தி, வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரோகிணி, இனிமேல் கணவருடன் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என முடிவுக்கு வந்தார்.

    முன்னதாக அவர், கணவர் வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, நான் சொல்வதை கணவர் கேட்க மறுக்கிறார். என்னுடன் பாசமாகவும் இருப்பதில்லை. இது பற்றி கேட்டால் என்னை அடித்து உதைக்கிறார். இனிமேல் வாழ விருப்பமில்லை, என பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் ரோகிணியின் தந்தை சஞ்சீவி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருமணமாகி 5 ஆண்டு ஆனதால், சேலம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

    இதனிடையே கருப்பூர் போலீசார், கடிதத்தையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    • சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான முகமது சித்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • முகமது சித்திக் பல வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் நூதனமுறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம், காந்திநகர், பாரி தெருவை சேர்ந்தவர் தென்னரசு. சாப்ட்வேர் என்ஜினீயர். கடந்த 9-ந் தேதி இவரது 'கிரெடிட் கார்டு' மூலம் 2 தவணைகளாக ரூ.1லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னரசு வங்கிக்கு சென்று விசாரித்தபோது மர்ம நபர் தனது கிரெடிட் கார்டின் எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி பணத்தை நூதனமான முறையில் சுருட்டியது தெரியவந்தது. 

    இதுகுறித்து தென்னரசு விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். கோயம்பேடு துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் கவுதமன் உத்தரவின் பேரில் 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான முகமது சித்திக் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் "கிரெடிட் கார்டு" பிரிவில் வேலை பார்த்து வந்ததும், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் மோசடிகள் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட சித்திக் தென்னரசு தென்னரசின் கிரெடிட் கார்டின் விபரங்களை தெரிந்து கொண்டு பணத்தை சுருட்டி உள்ளார். கிரெடிட் கார்டின் நுட்பங்கள் பற்றி நன்கு அறிந்த முகமது சித்திக் இதுபோன்று மேலும் பல வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் நூதனமுறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×