search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தாக்கி"

    • புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது.
    • இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.

    சத்தியமங்கலம்:

    ஆசனூர் அருகே உள்ள ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (37). பேக்கரி ஊழியர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது கிராமத்துக்கு சென்றார்.

    அப்போது இருட்டில் புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். இது பற்றி தெரிய வந்ததும் ஆசனூர் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் காயத்துடன் இருந்த பசுபதியை மீட்டு வனத்துறை ஜீப்பிலேயே சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
    • ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (68). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அத்துடன் கால்நடை களையும் வளர்த்து வருகின்றார்.

    இதில் 20 ஆடுகளை வளர்த்து வரும் தவசியப்பன் இவரது தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம்.

    அதேபோல் சம்பவத்தன்றும் விளாங்குட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாலை நேரத்தில் ஆடுகளை மேய்க்கச் அழைத்து சென்று ள்ளார். அவருடன் மற்ற நபர்களும் ஆடு மேய்ப்பதற்கு உடன் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

    இதனையடுத்து யானை அவரை தாக்க வருவதற்குள் அவருடன் வந்தவர்கள் தகர டின்னில் சப்தம் ஒலி எழுப்பியதை கேட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    பின்னர் அவருடன் வந்த நபர்கள் அவரது மகன் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து தவசியப்பன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    யானை தூக்கி வீசப்பட்டதில் விலா எலும்பு, கழுத்து பகுதியில் எலும்பு முறிவு மற்றும் சிராய்ப்பு காயங் களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக சுரேஷ் (35), கணேஷ் (32) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவரும் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் சுரேசுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கணேசை அங்குள்ள முள் புதருக்குள் தூக்கி வீசியது. இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த ஒற்றை யானை பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தமிட்டதை அடுத்துஅங்கு வந்த தட்டக்கரை ரேஞ்சர் பழனிசாமி மற்றும் வனக்கா வலர்கள் அவர்களை மீட்டு, முதல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர்.

    பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    ×