என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
யானை தாக்கி விவசாயி படுகாயம்
- தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
- ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (68). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அத்துடன் கால்நடை களையும் வளர்த்து வருகின்றார்.
இதில் 20 ஆடுகளை வளர்த்து வரும் தவசியப்பன் இவரது தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம்.
அதேபோல் சம்பவத்தன்றும் விளாங்குட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாலை நேரத்தில் ஆடுகளை மேய்க்கச் அழைத்து சென்று ள்ளார். அவருடன் மற்ற நபர்களும் ஆடு மேய்ப்பதற்கு உடன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
இதனையடுத்து யானை அவரை தாக்க வருவதற்குள் அவருடன் வந்தவர்கள் தகர டின்னில் சப்தம் ஒலி எழுப்பியதை கேட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
பின்னர் அவருடன் வந்த நபர்கள் அவரது மகன் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தவசியப்பன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
யானை தூக்கி வீசப்பட்டதில் விலா எலும்பு, கழுத்து பகுதியில் எலும்பு முறிவு மற்றும் சிராய்ப்பு காயங் களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்