search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்கேல் ஹோல்டிங்"

    உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.



    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.

    இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
    பேட்டிங், பவுலிங்கில் மிகுந்த திறன் இல்லாததால் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஆல்ரவுண்டர் அல்ல என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஹோல்டிங் கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ். அவர் காலத்திற்குப் பிறகு இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை உருவாக்கியதில்லை. இந்நிலையில்தான் பிசிசிஐ கண்ணில் ஹர்திக் பாண்டியா தென்பட்டார்.

    சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கும் இவர்தான் இந்தியாவின் அடுத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என முன்னிலை நிறுத்தப்பட்டார். ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் இதுவரை முடிந்துள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். பந்து வீச்சிலும் சோபிக்கவில்லை.

    இதனால் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனம் எழும்பி வருகிறது. இந்நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஆல்ரவுண்டர் இல்லை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவின் அட்டக் சரியான பேலன்ஸ் ஆக இல்லை. ஹர்திக் பாண்டியாவை பந்து வீச்சு உதவிக்காக வைத்துக் கொண்டு இந்தியா விளையாடுகிறது. அவர் பந்து வீசும்போது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், தொடர்ச்சியாக சதம் அடிக்காவிடிலும், 60 அல்லது 70 ரன்கள் அடிக்க வேண்டும். அப்படி அடித்து இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் சந்தோசம்.



    ஆனால் அவரால் ரன்களும் அடிக்க முடியவில்லை, இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்த வாய்ப்பு வழங்கினாலும், அவரால் விக்கெட் வீழ்த்த இயலவில்லை. அவர் தொடர்ந்து சீரான பந்து வீச்சை வெளிப்படுத்துவதில்லை. பந்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்து பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைக்க முடியவில்லை.

    ஒன்றிரண்டு சிறந்த பந்துகளை வீசலாம், இருந்தாலும், பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைப்பது அவசியம். உலகத்தின் எந்தவொரு பகுதியில் முன்னணி பந்து வீச்சாளராக செல்ல வேண்டும், கேப்டன் உங்களை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால், சரியான திசையில் பந்து வீச வேண்டும், அதன் மூலம் விக்கெட்டுக்களை கைப்பற்றி, கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இது அவரிடம் இல்லை என்பது என்னுடைய கணிப்பு’’ என்றார்.
    ×