search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக் பென்ஸ்"

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.
    • கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார்.

    இந்நிலையில், டிரம்பை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிரம்ப் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தார்.

    கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    • இண்டியானாவில் உள்ள மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • ஏற்கனவே அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் கடந்த மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    ஏற்கனவே, கடந்த 22-ம் தேதி டேலாவேரில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    லிபியாவை போல வடகொரியாவின் முடிவு இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரை முட்டாள் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. #USNorthKoreaTalks #TrumpKimSubmit
    பியான்ங்யங்:

    இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா - அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என அமெரிக்க நிபந்தனை விதித்தது.

    இதனை அடுத்து, நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்தது. இதனால், சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடப்பது உறுதியான ஒன்றாக இல்லை. இது தொடர்பாக அடுத்தவாரம் முடிவெடுக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சை ஒய்வதற்குளாக லிபியாவை போல வடகொரியா முடிவை தேடிக்கொள்ளும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருந்தார். 


    மைக் பென்ஸ் 

    இதற்கு வடகொரியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா ஒன்றும் கெஞ்சவில்லை. லிபியாவையும் வடகொரியாவையும் ஒப்பிடுவதன் மூலம் அவர் முட்டாள்தனமான டம்மி அரசியல்வாதி என்பதை காட்டுகிறார். லிபியாவில் எந்த அணு ஆயுதங்களும் இல்லை. ஆனால், வடகொரியா அப்படி இல்லை. நாங்கள் அணு ஆயுதம் வைத்துள்ள நாடு’ என வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
    ×