search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழக்கங்கள்"

    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
    • இனியாவது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், கிராம பஞ்சாயத்து ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும், புதுச்சேரி அரசை கண்டித்து, காரைக் காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழி யர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலா வுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலை வர் அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் எனும் முதல மைச்சரின் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்க ளை பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் செய்யும் உள்ளாட்சித்துறை, இனியா வது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க செய லாளர் சகாயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், சம்மேளனன நிர்வாகிகள் கலைச் செல்வன், திவ்விய நாதன், சந்தன சாமி, புக ழேந்தி, கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

    • கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மன்னார்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரை வேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    ×