search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர் மணிகண்டன்"

    • அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில்நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
    • இவர் தற்போது மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று புகார் அளித்திருந்தார்.


    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சாந்தினி

    அதன்பின்னர் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது நடிகை அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தவிட்டப்பட்டது.


    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற சாந்தினி

    இதையடுத்து நடிகை சாந்தினி அவருடைய காரில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நடிகை சாந்தினிக்கும் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சாந்தினிக்கு காலில் காயம் ஏற்பட்டு மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகை சாந்தினி மணிகண்டனை பார்த்து விட்டு தான் செல்வேன் என்று பிடிவாதம் செய்தார்.
    • முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்:

    மலேசியாவை சேர்ந்தவர் சாந்தினி (வயது33). சின்னத்திரை துணை நடிகையான இவருடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பழகி வந்தார். இந்த நிலையில் மணிகண்டனால் கர்ப்பமாகி கருகலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி போலீசில் புகார் செய்தார்.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதால் மணிகண்டன் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்கு நடிகை சாந்தினி காரில் இன்று காலை வந்தார். அவர் நான் மணிகண்டனை சந்திக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் மணிகண்டனின் தாய் மற்றும் ஆதரவாளர்கள் மணிகண்டன் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரை பார்க்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    இருந்த போதிலும் நடிகை சாந்தினி மணிகண்டனை பார்த்து விட்டு தான் செல்வேன் என்று பிடிவாதம் செய்தார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடிகை சாந்தினியை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் எதற்காக மணிகண்டனை தேடி வந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் கூறும்போது, இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மணிகண்டனின் அரசியல் எதிரிகள் நடத்தும் நாடகம் என்றனர்.

    • அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில்நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
    • தற்போது ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று புகார் அளித்திருந்தார்.

     

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    அதன்பின்னர் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த சாந்தினி

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த சாந்தினி

     

    இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது நடிகை அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தவிட்டப்பட்டது.

     

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சாந்தினி

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சாந்தினி

    இந்நிலையில் நடிகை சாந்தினி அவருடைய காரில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். அங்கிருந்த போலீசார் நடிகை சாந்தினியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இதுகுறித்து பேசி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அந்த புகாரில் நடிகை சாந்தினி தெரிவித்திருந்தார்.

    சென்னை:

    நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

    ×