search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் சந்திரபாபு நாயுடு"

    பா.ஜ.க.வுக்கு எதிராக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியை மூத்த தலைவர் வழிநடத்துவார் என்று ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #BJP #ChandrababuNaidu

    நெல்லூர்:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் பிரதமர்? யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார்? என்பதில் குழப்ப நிலை நிலவி வருகிறது.

    இது சம்பந்தமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த தெலுங்குதேச கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்த வரை 2 அணிகள்தான் இருக்கின்றன. அதில் ஒன்று பாரதிய ஜனதா அணி, மற்றொன்று பாரதிய ஜனதாவுக்கு எதிரான அணி.

     


    இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கூட்டணியில் சேருவது அவசியமான ஒன்றாகும்.

    எங்கள் கூட்டணியை மூத்த தலைவர் ஒருவர் வழிநடத்துவார். ஆந்திராவுக்கு யார் நன்மை செய்வாரோ அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.

    பாராளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி அணிகள் கூடி பேசி முக்கிய முடிவுகள் எடுப்போம். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராடுவோம்.

    பிரதமர் மோடி வேண்டும் என்றே சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையினரை தெலுங்குதேசம் கட்சி தலைவர்களுக்கு எதிராக ஏவி விட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #ChandrababuNaidu

    ஆந்திராவில் என்.டி.ஆர் பெயரில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். #AnnaCanteens
    நகரி:

    தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க அம்மா கேன்டீன்களை திறந்தார்.

    அதேபோல் ஆந்திராவில் மறைந்த முதல்வர் என்.டி. ராமராவ் பெயரில் மலிவு விலை உணவு கேன்டீன்கள் திறக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். ஆந்திராவில் என்.டி. ராமராவ் அன்பாக ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகிறார்.

    இதையடுத்த அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக ஆந்திர அரசு அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து சென்றனர்.

    இதையடுத்து ஆந்திராவில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆந்திரா தலைநகர் அமராவதியில் தலைமை செயலகத்தில் 2016-ம் ஆண்டு அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

    மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தொடங்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தன.


    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்கள் முதல்கட்டமாக நேற்று தொடங்கப்பட்டது. விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா’ கேன்டீனை தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார்.

    இங்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் சாப்பாடு ரூ.5 மலிவு விலையில் வழங்கப்படுகிறது.

    அண்ணா கேன்டீன் திறந்தது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், “இந்த கேன்டீன்களில் தூய்மை, சுகாதாரம், தரம் ஆகியவை சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் உள்ள ரெஸ்டாரண்ட்கள் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு பராமரிக்கப்படும். இந்த திட்டத்துக்கு பலதரப்பினர் ஆதரவு தரவேண்டும்” என்றார்.

    இதற்கிடையே அண்ணா கேன்டீன்களுக்காக பலர் பணமாகவும், காய்கறிகளாகவும் நன்கொடை அளித்து வருகிறார்கள். #AnnaCanteens
    ×