search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டைகோஸ்"

    • தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
    • போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்த லார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டு மல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.10 மட்டுமே விலை போகிறது

    இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர். நாளடைவில் இந்த முட்டைகோஸ்கள் அழுகி மண்ணோடு மண்ணாகி விடும்.

    • ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.
    • தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய உடுமலை பகுதி கிராமங்களில் உள்ள குளிர்ந்த வானிலை முட்டைகோஸ் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.அதனடிப்படையில் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில்ஈடுபட்டுள்ளோம்.

    ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது.நாற்றங்கால் அமைத்து தொழு உரம்,மண் புழு உரம் போன்றவற்றைப் போட்டு விதைப்படுக்கை அமைக்கிறோம்.அதில் 10 செமீ இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும்.

    பின்னர் நாற்றுக்களைப் பிடுங்கி தயார்படுத்தப்பட்ட நிலத்தில் 40 செமீ இடைவெளியில் நடவு செய்கிறோம்.முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.

    பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப் புழுக்கள்,அஸ்வினிகள் தாக்குதல் இருக்கும்.இதுதவிர இலைப் புள்ளி நோய்,இலைக் கருகல் நோய்,கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.எனவே அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத்துறையினரின் பரிந்துரை பெற்று தெளிப்பது சிறந்தது.

    முட்டைகோசை நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்யத்தொடங்கலாம்.சுமார் 120 நாட்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம்.இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.

    மலைப்பகுதிகளில் இதை விட 3 மடங்கு மகசூல் கிடைக்கும் என்றாலும் சமவெளியிலும் முட்டைகோஸ் சாகுபடி லாபகரமானதாகவே உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.

    ×