search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மாற்றிகள்"

    • 63 கிலோ வாட் திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது.
    • நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் திருவெண்காடு பிரிவுக்கு உட்பட்ட திருநகரி மற்றும் திருவாலி கிராமங்களில் கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அதனை இயக்கி வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு சீர்காழி மின்வாரிய கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜய பாரதி, விஸ்வநாதன், திருவெண்காடு உதவி மின் பொறியாளர் ரமேஷ்குமார், சீர்காழி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், தாமரை செல்வி திருமாறன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதியதாக ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தகல்நார்சம்பட்டி, மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, புத்தகரம் வெலகல்நத்தம், வேட்டப்பட்டு, சோமநாயக்கன்பட்டி, அக்ராகரம், திரியாலம் பொம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை தேவராஜ் எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் அரசு மூலம் இலவசமாக மின்சாரம் பெற்றதற்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா, திமுக ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், உமா, கவிதா, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 புதிய மின்மாகந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியால் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.
    • சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கந்தம்பட்டி, புத்திர கவுண்டபாளையம், ஆத்தூர் பகுதிகளுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியும், ஆத்தூர் துணை மின்நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின்மாற்றியும், புத்திர கவுண்டபாளையம் துணை மின் நிலையத்திற்கு மின் பகிர்மான திறன் 10 மெகா வாட்டில் இருந்து 16 மெகாவாட் ஆக அதிகரித்து மின்மாற்றிகள் நிறுவப்பட்டு உள்ளன.

    அவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த மின்மாற்றிகளின் மூலம் அதிகமான பளுவை ஏற்றுக்கொண்டு மின் வினியோகம் செய்து வரும் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.

    மேலும் கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சர்கார் கொல்லப்பட்டி, பெருமாம்பட்டி, கணவாய்காடு, தும்பாதூளிப்பட்டி, பால் பண்ணை மற்றும் ஆத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழனியாபுரி, செல்லியம்பாளையம், அக்கி செட்டிபாளையம், கொத்தாம்பாடி மற்றும் புத்திரகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஆரியம்பாளையம். பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

    இந்த தகவலை சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    ×