search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் மாற்றி"

    • புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி புதிய கட்டிட பணிகள் முடிவுற்று தற்போது திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

    மின்மாற்றி

    இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் இந்த மின் மாற்றி கல்லூரியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில் மின்சார வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இதில் மின்வாரிய இளநிலை செயற்பொறி யாளர் கணேஷ் ராம கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி ராமதாஸ், முஜ்பின் ரகுமான், கல்லூரி பேராசிரியர்கள் வேணு கோபால், பாலமுருகன், தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செய லாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் புதிய மின்மாற்றி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்ட செயற்பொறியாளர் மீனா குமாரி தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, தெள்ளார் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், வட்ட அதிகாரி மீனா குமாரி, உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி மின் பொறியாளர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்கபட்டது.
    • புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது. இதை போக்குவதற்கு புதிதாக இரண்டு 100 கே .வி .ஏ. மின் மாற்றிகள் அமைக்கபட்டது.

    இந்த புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார். விழாவில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார், இள மின் பொறியாளர் அன்பரசன் மனோகரன் மற்றும் மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மின் மாற்றி மூலம் சீரான மின் அழுத்தம் கிடைக்கும்.

    இதே போல் 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்க பட்டது.

    குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு வேதாரண்யம் பகுதியில் 257 மின் மாற்றிகள் இயக்கி வைக்கபட்டுள்ளதாக செயற்பொறியாளர் சேகர் தெரிவித்தார்.  

    ×