search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிசோரம் மாநிலம்"

    மிசோரம் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், முதல்வர் லால் தன்ஹாவ்லா வேட்பு மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #MizoramElection #MizoramCM
    ஐசால்:

    நாற்பது தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடைகிறது. இதனால் புதிய அரசை தேர்வு செய்வதற்காக வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



    இந்த தேர்தலில் செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த முதல்வர் லால் தன்ஹாவ்லா, இன்று செர்சிப் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.  ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், முதல்வரால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய முடியவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும்.

    இதுபற்றி கூடுதல் துணை கமிஷனர் கூறுகையில், ‘செர்சிப் நகரில் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள துணை கமிஷனர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்து வருவதால், முதல்வர் தனது வேட்பு மனு தாக்கல் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாம். இன்று மனு தாக்கல் செய்ய வேண்டாம் என யாரும் அவரிடம் கூறவில்லை’ என்றார். #MizoramElection #MizoramCM
    மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி லால் தன்ஹாவ்லா கடிதம் எழுதி உள்ளார். #Mizoram #LalThanhawla #Modi #ChiefElectroralOfficer
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக இருக்கிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி கடிதம் எழுதி உள்ளார். அதில், சசாங்க் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதாகவும், சுமுகமாக தேர்தல் நடைபெற அவரை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதிய நியமனம் செய்ய முடியாவிட்டாலும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சசாங்க் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சபாநாயகருமான ஹிப்பி நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.

    அதனை தொடர்ந்து அவர் உடனடியாக பா.ஜ.க.வில் இணைந்தார். தன்னை முதல்-மந்திரி மனவேதனை அடைய செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். 
    ×