search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட செயற்குழு கூட்டம்"

    • மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்களும், எம்.எல். ஏ.க்களுமான இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
    • சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ரகமத் மகால் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடக்கிறது.

    மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்களும், எம்.எல். ஏ.க்களுமான இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மநாகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், கழக அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதாவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • நகரில் மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதாவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் கள் வெற்றிவேல், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலு வரவேற்புரை யாற்றினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாதார பிரிவின் தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.

    இதில் பிரதமரின் கனவு திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்துவது எனவும், மாவட்டத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடை செய்யக் கோரியும், கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க கோரியும், மல்லாபுரம் -ராஜதானி தார் சாலையை விரிவுபடுத்தி பஸ் போக்குவரத்தை தொடங்க கோரியும், தேனி - உப்பார்பட்டியில் அரசு சிப்காட் தொழில் நிறுவனம் அமைத்திட தேவையான பணிகளை துரிதமாக செயல்படுத்துவது எனவும்,

    பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றக்கோரியும், நகரில் மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • சென்னை தரமணியில் உள்ள அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் உமாராணி, பூந்தமல்லி ஒன்றிய நிர்வாகி மாறி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் வாங்கும் பில் முழுமையான தொகை வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று வருடம் பணி முடிந்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    ஏற்கனவே மினி மையத்தில் இருந்து மெயின் மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கான இன்கிரிமென்ட் தொகை வழங்க வேண்டும். எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். உணவு செலவினங்களுக்கு முன்பணமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்கொடை ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவீனம் ரூபாய் 200 வழங்க வேண்டும். பயணப்படி ரூபாய் 400 வழங்க வேண்டும். முறையான சரியான எடைக் கருவிகள் வழங்க வேண்டும் பணிவரன் முறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30 ஆம் தேதி சென்னை தரமணியில் உள்ள அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் திரளான அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×