search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் கடத்தல்"

    • வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார்.

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் வனாஸ்வர். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்தார். அங்கு படிப்பை முடித்து விட்டு தமிழகத்துக்கு திரும்பிய வினோத் பழைய பல்லாவரத்தில் தங்கியுள்ளார். தற்போது மருத்துவ தேர்வுக்கான படிப்பை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வினோத்துக்கு ஏற்கனவே அறிமுகமான சங்கர் என்பவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து கடத்த திட்டமிட்டார். இதன்படி சங்கரும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வினோத்தை டீ குடிக்க அழைத்துள்ளனர்.

    அப்போது திடீரென 2 பேர் சேர்ந்து வினோத்தை காரில் தூக்கி போட்டு கடத்திச் சென்றனர். அவர்கள் நாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி ஏமாற்றியுள்ளனர்.

    மருத்துவ மாணவனான வினோத்தின் தந்தைக்கு போன் செய்து உங்கள் மகனை கைது செய்துள்ளோம். சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனால் பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார். இந்த பணத்தை பறித்துக் கொண்ட 2 பேரும் 5 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு மாணவர் வினோத்தை காரில் இறக்கி விட்டு தப்பினார்கள்.

    இதுபற்றிய புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ மாணவரை கடத்திய வழக்கில் சங்கர் மற்றும் காரில் கடத்திய சிவா, பாஸ்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதத் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சுசிலா தனது மகன் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • குன்றத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சபரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.

    போரூர்:

    போரூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் சபரி (வயது16) பாலிடெக்னிக் கல்லூரிரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சபரி நேற்று நண்பர்களுடன் விளையாடி விட்டு இரவு 9 மணி அளவில் போரூர் ரவுண்டானா வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சபரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர்.

    பின்னர் சபரியின் செல்போனை பறித்து அவரது தாய் சுசிலாவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் "உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம் ரூ. 30 ஆயிரம் பணம் கொடுத்தால் விட்டு விடுகிறோம்" என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா தனது மகன் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் விரைந்து வந்து மர்ம நபர்கள் சுசிலாவை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணின் "டவர் சிக்னலை" வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது குன்றத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சபரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சபரியை பத்திரமாக மீட்ட னர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×