search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர்கண்காட்சி"

    • சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
    • மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    ஏற்காடு:

    சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. ஆகும்.

    மலைகளின் இளவரசி

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வளைந்து நெளிந்த மலைப்பாதைகள், விண்ணை முட்டும் மரங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை கடந்து சென்றால், பரந்து விரிந்த ஏரியும், படகு சவாரியும் கவனம் ஈர்க்கிறது.

    இது மட்டுமின்றி அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், தலைச்சோலை என்று ஒவ்வொரு இடமும் இயற்கை அழகால் இதயம் வருடுகிறது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை என 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு ஊராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் தமிழரசி, தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ், ஏற்காடு ஊராட்சி ஒன்றி ஆணையாளர் அன்புராஜ், தாசில்தார் தாமோதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சுற்றுலா துறை, ேதாட்டக்கலை துறை, தீயணைப்புதுறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ஒரு வழிபாதையாக மாற்றம்

    கூட்டத்தில், கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பது, சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்த இடம் ஒதுக்குவது, போக்குவரத்தை சீர்படுத்த கூடுதலான போலீசாரை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் சுறறுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வது, மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை பாதையை ஒருவழி பாதையாக மாற்றுவது பற்றி யும், ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளையும் செய்து தருவது பற்றி விவா திக்கப்பட்டது. கேடைவிழா நடைபெறும் 8 நாட்களுக்கும் சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வும் முடிவு செய்யப்பட்டது.

    • ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
    • தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

    இங்கு கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகை–யில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் கோடைவிழா மலர்க் கண்காட்சி, லட்சக்கணக்கோனார் பார்வையிட்டு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    தற்போது, கோடை காலம் தொடங்குவதால், மலர்க்கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் தோட்டக் கலைத்துறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    7 லட்சம் விதைகள்

    இதுகுறித்து ஏற்காடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானது. இதற்காக, லட்சக்கணக்கில் மலர்ச்செடிகள் தேவை என்பதால், அதற்கான நடவுப் பணிகள் தொடங்கியுள்ளோம்.

    கொய்மலர்கள் எனப்படும் அலங்கார மலர்ச்செடிகளான ஆஸ்டர், பால்சம், பெகோனியா, கேலண்டுலா, கார்நேசன் மேரிகோல்டு உள்ளிட்டவை சுமார் 6 லடசம் செடிகள் வளர்க்கப்பட உள்ளன.

    இவற்றுக்காக 6 லட்சம் விதைகள் கொல்கத்தாவில இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

    மேலும், டேலியா வகை மலர்களை உருவாக்கும் வகையில், 1 லட்சம் டேலியா மலர் நாற்றுகள், விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

    மலர்ச் சிற்பங்கள்

    கொய்மலர் விதைகள், டேலியா நாற்றுகள் ஆகியவற்றை, 10 ஆயிரம் மலர்ந்தொட்டிகளில் நடவு செய்யும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மலர்ச்செடிகளில சில வகைகள், 2 மாதத்திலும், சில வகைகள் 3 மாதத்திலும் பூக்கக் கூடியவை, எனவே, இப்போதே மலர்ச்செடிகளையும் விதைகளையும் நடவு செய்துள்ளோம்.

    இதுதவிர, ரோஜா தோட்டத்திலும் பலவகை ரோஜாக்களைக் கொண்ட தோட்டத்தை உருவாக்க, 4 ஆயிரம் ரோஜாச் செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும், அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள புல்வெளிகளை சீரமைக்கும் பணி, புற்களால் ஆன பொம்மைகளை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் தொடங்கப் பட்டுள்ளன. கோடை விழா மலர்க் கண்காட்சியின்போது, மலர்ச் சிற்பங்கள் குறித்து திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும்.
    • ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும். இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரையண்ட்பூங்காவில் 740 வகைகளில் வண்ண ரோஜா செடிகளுக்கு கவாத்து செய்யும் பணிகள் முதற்கட்டமாக கடந்தவாரம் நடைபெற்றது.

    தற்போது 2-ம் கட்டமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த செடிகள் அடுத்து 45 முதல் 60 நாட்களில் அடுக்கடுக்காக 6 மலர் படுகைகளில் விதவிதமாக பூத்துகுலுங்கும். கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×