search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மநபர்கள் கைவரிசை"

    • ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தனர். ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையும் பணிக்கு வந்த ஊழியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது பல கிலோ நகைகள் மாயமாகி இருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஊழியர்கள் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். நகைகள் எப்படி கொள்ளை போனது என்பது குறித்து கடை முழுவதும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கு செல்லக்கூடிய கதவு திறந்து கிடந்தது. இந்த கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இன்று கதவு திறந்திருந்ததால் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் முன்பக்கம் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்பதால், பின்பக்கம் உள்ள கார்பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து நகைக்கடைக்கு செல்லக்கூடிய படியில் மேலே ஏறி சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மீண்டும் அதே பகுதி வழியாக கீழே இறங்கி வந்து தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த நகைக்கடையில் 20 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது. இருந்த போதும் மேலாளர் வந்து பார்த்த பின்பே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நகைக்கடையில் கட்டிட பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு செல்வது போல் 3 பேர் சென்று இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏசி வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக கொள்ளையர்கள் சென்ற விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

    • சதீஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
    • பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை ஜனார்த்தனன் ஆகியோர் இருவேல்பட்டில் வசித்து வருகின்றனர். சதீஷ்குமாரின் தந்தை ஜனார்த்தனன் விபத்தில் சிக்கி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைக் காண வீட்டை பூட்டிவிட்டு சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று மாலை இருவேல்பட்டு கிராமத்திற்கு திரும்பினர்.

    அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடை ந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. திருடுப்போன வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடு போன வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • உறவினர் திருமணத்திற்கு செல்ல தனது மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
    • அவர் வைத்த டிராவல் பேக் மாயமானது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 52). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் தர்மபுரியில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்கு செல்ல தனது மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஓசூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில் தான் கொண்டு வந்த 12½ பவுன் தங்க நகைகள் வைக்கப்பட்ட டிராவல் பேக்கை வைத்தார்.

    தர்மபுரி அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் வைத்த டிராவல் பேக் மாயமானது.இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உடனடியாக அங்கிருந்து நேராக சேலம் வந்து பள்ளப்பட்டி போலீசில் நகை மாயமானது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    நகை பறிகொடுத்த பாஸ்கரன் ஆத்தூர் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்தின் உறவினர் ஆவார்.

    ×