search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysteries Handcraft"

    • சதீஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
    • பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை ஜனார்த்தனன் ஆகியோர் இருவேல்பட்டில் வசித்து வருகின்றனர். சதீஷ்குமாரின் தந்தை ஜனார்த்தனன் விபத்தில் சிக்கி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைக் காண வீட்டை பூட்டிவிட்டு சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று மாலை இருவேல்பட்டு கிராமத்திற்கு திரும்பினர்.

    அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடை ந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. திருடுப்போன வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடு போன வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×