search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவக் கழிவு"

    • வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி பகுதியில் ஆந்திரா, கர்நாடகா செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளது.

    இந்தப் காப்பு காட்டில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள், ஊசி மற்றும் மருந்துகளை மர்ம கும்பல் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

    இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

    அதேபோல் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால் அதிகளவில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவக் கல்லூரிகளால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே தமிழக எல்லையில் உள்ள வன சோதனை சாவடியில் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்.

    மருத்துவக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×