search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையத்தில்"

    • குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
    • சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    திருச்செங்கோடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஆயக்காட்டை சேர்ந்தவர் சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடியினர் இருவரும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்கு பயந்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்க ளையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சவுந்தர்யா தனது காதல் கணவருடன்தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை வசந்தகுமாருடன் அனுப்பி வைத்தனர்.

    • கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாராயம், மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏராளமானவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அதில் ஒரு சிலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    நாளொன்றுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிப்பதால், போலீஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் வானூர், கோட்டக்குப்பம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மாலை மயக்கம் வந்தது. இதனையடுத்து பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று பினாயில் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முழுவதும் தெளித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தின் வெளியிலும் தெளித்தனர். அதன் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.

    • சைலேந்திரபாபு போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.
    • பதிவேடுகள் பராமரிப்புகளை பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்திய டி.ஜி.பி., சைலேந்திரபாபு போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார். விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி., சைலேந்திர பாபு திடீர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தில் போலீசாரின் பணி, பதிவேடுகள் பராம ரிப்பு போன்ற வைகளை பார்வையிட்டார்.

    மேலும், போலீஸ் நிலைய பராமரிப்பு, சுற்றுசூழல் பராமரிப்பு ஆகியவை சிறப்பாக இருந்ததால், பாராட்டும் விதமாக போலீசாருக்கு பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்து பரிசு வழங்கியதால் போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆய்வின் போது சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்ளிட்ட போலீசார் பணியில் இருந்தனர்.

    • திருமணம் செய்த காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மழையூர் காவல் நிலையத்தில் துவார் அ டுத்த கீழே வாண்டான்விடுதியை சேர்ந்த ரெங்கசாமி மகள் கவிதா. இவரும் அதே பகுதியை சேர்ந்த திருப்பூரில் கூலி வேலை செய்து வரும் செல்லக்கண்ணும் (வயது 24) காதலித்து வந்துள்ளனர்.

    இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்த அவர்கள், திருப்பூர் ஐயப்பன் கோவில் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று கவிதாவின் பெற்றோர்மழையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இதனை அறிந்த அவர்கள் உடனடியாக தாங்களால் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி இருதரப்பு பெற்றோர்களு க்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இருதரப்பு பெற்றோர்களும் காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி சென்றுவிட்டதால்,

    காதல் ஜோடி வயதை காரணம்காட்டி போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

    ×