search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "At the police station"

    • கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாராயம், மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏராளமானவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அதில் ஒரு சிலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    நாளொன்றுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிப்பதால், போலீஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் வானூர், கோட்டக்குப்பம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மாலை மயக்கம் வந்தது. இதனையடுத்து பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று பினாயில் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முழுவதும் தெளித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தின் வெளியிலும் தெளித்தனர். அதன் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.

    • சைலேந்திரபாபு போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.
    • பதிவேடுகள் பராமரிப்புகளை பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்திய டி.ஜி.பி., சைலேந்திரபாபு போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார். விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி., சைலேந்திர பாபு திடீர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தில் போலீசாரின் பணி, பதிவேடுகள் பராம ரிப்பு போன்ற வைகளை பார்வையிட்டார்.

    மேலும், போலீஸ் நிலைய பராமரிப்பு, சுற்றுசூழல் பராமரிப்பு ஆகியவை சிறப்பாக இருந்ததால், பாராட்டும் விதமாக போலீசாருக்கு பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்து பரிசு வழங்கியதால் போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆய்வின் போது சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்ளிட்ட போலீசார் பணியில் இருந்தனர்.

    ×