search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் அறிவுரை"

    • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரவுடிகள் பட்டியல் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளார்.
    • இனி நீதிமன்ற விசாரணைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். வேறு கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட வேண்டாம். திருந்தி வாழ முயற்சியுங்கள் என போலீசார் கேட்டுக் கொள்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரவுடிகள் பட்டியல் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளார்.

    இதனையடுத்து சேலம் மாநகர துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் உதவி கமிஷனர் ராம மூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் ரவுடிகளை கண்கா ணிக்க தொடங்கியுள்ளனர். சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் தெரு, சுந்தர் தெரு, எஸ்.எம்.சி காலனி ஆகிய பகுதிகளில் 111 ரவுடிகள் உள்ளனர். இவர்கள் பல்வேறு கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறியில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

    இவர்களது வீடுகளுக்கு போலீசார் சென்று வழக்கு விசாரணைக்கு செல்கிறீர்களா? தற்போது என்ன தொழில் செய்கிறீர்கள்? சொந்த வீடா? வாடகை வீடா? வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என துருவி துருவி விசாரணை நடத்தியும், அறிவுரை வழங்கியும் வருகிறார்கள்.இனி நீதிமன்ற விசாரணைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். வேறு கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட வேண்டாம். திருந்தி வாழ முயற்சியுங்கள் என போலீசார் கேட்டுக் கொள்கின்றனர். இது தவிர ரவு டிகளின் குடும்பத்தினரை அழைத்து நீதிமன்ற விசாரணைக்கு செல்ல அறிவுரை கூறுங்கள். வேறு வழக்குகளில் சிக்காமல் இருக்க வீட்டில் இருக்க கூறவும். அல்லது தொழில் ஏதாவது ஒன்றுக்கு செல்லுமாறு கூறவும் என்றும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    • பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர்.
    • தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் பள்ளிக்கு வராமல் வீதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீஸார் அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் நகர பகுதியில் பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது நகர பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இதனை கண்டார். அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஏ.டி.எஸ்.பி., மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீ சாரிடம் மாணவர்களை ஒப்படைத்து, பள்ளிக்கு அழைத்து சென்று விட கூறினார். மாணவர்களை அழைத்து சென்ற போக்குவரத்து போலீசார், தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.

    ×