search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி பாலியல் விவகாரம்"

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது குற்றவாளியாக மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.



    இந்நிலையில் மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (28) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மணிவண்ணனை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதன்பேரில் மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க மனுவை விசாரித்த நீதிபதி நாகராஜன் அனுமதி வழங்கினார். இதையடுத்து மணிவண்ணனை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்கில் கைதான பைனாஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகியோருடன் மணிவண்ணனுக்கு எந்தெந்த வகைகளில் பழக்கம் இருந்தது என்று விசாரித்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் பெண்ணின் சகோதரரை தாக்கியதால் கைதான மணிவண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் சேர்க்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5வது நபராக மணிவண்ணனை போலீசார் இணைத்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5வது நபராக மணிவண்ணனை கைது செய்தனர்.

    இதையடுத்து, மணிவண்ணனை வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #PollachiCase #CBCID

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏப்ரல் 1-ம் தேதி நக்கீரன் கோபால் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. #NakkeeranGopal #PollachiAbuseCase
    சென்னை:

    பொள்ளாச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது  பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை.



    இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், நக்கீரன் கோபால் மற்றும் தேனி கண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். அதில், மார்ச் 30-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறியதுடன், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாக கூறினார்.

    இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும், சிபிசிஐடி விசாரணை தொடர்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், நக்கீரன் கோபால் நாளைக்குப் பதில் ஏப்ரல் 1-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக அனுமதி அளித்தனர்.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார். #NakkeeranGopal #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #NakkheeranGopal
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    அதனடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(28), கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும், நகர மாணவரணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்கள்.



    இதைத்தொடர்ந்து பார் நாகராஜ் நேற்று மாலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜூக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 4 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் முழு பதிலையும் அளித்துள்ளேன்.

    என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை சொல்ல முடியாது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் வழங்கினர். பின்னர் வக்கீல் தண்டபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3 மணிக்கு மணிமாறன் வீட்டுக்குச் சென்று சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை

    இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் வருகிற 25-ந் தேதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து வருகிற 30-ந் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #NakkheeranGopal

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbusecase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணை தொடங்கினர்.

    மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது பார் நாகராஜ் பல்வேறு வகைகளில் தங்களுக்கு உதவி செய்ததாக கூறி உள்ளார். மேலும், பேஸ்புக்கில் அவருடன் நட்பில் இருந்தவர்கள் எந்தெந்த வகைகளில் உதவி செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும், இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PollachiAbusecase #CBCID

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
    நெல்லை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லையில் இன்று அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி மாணவ- மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வழக்கம் போல் வகுப்பிற்கு வந்த மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியவாறு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

    இன்று மதியம் வரை இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் இன்று காலை மாணவ-மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். இந்திய மாணவர் சங்க மாநகர செயலாளர் சிவா தலைமையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றார்கள்.

    நெல்லை கோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். பொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க செயலாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மந்திர மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் வக்கீல்கள் சுதர்சன், கந்தசாமி, ரமேஷ், துரை, மீனாட்சி சுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். #PollachiCasse
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் 2,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
    கோவை:

    தமிழகம் மற்றும் புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (19-ந்தேதி) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 2, 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு நடைபெறும் என்று வக்கீல்கள் கூறினர். #PollachiCase

    பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்ற பெண் வக்கீல்களின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது. #PollachiAbuseCase #PollachiCase #MadrasHC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹில் ரமானி ரோகிணி நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது பெண் வக்கீல்கள் சிலர் ஆஜராகி, பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டு மேற்பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு தலைமை நீதிபதி ஏற்கனவே இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது எனவே அந்த வழக்கு விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று பெண் வக்கீல்களின் கோரிக்கைகளை நிராகரித்தனர். #PollachiAbuseCase #PollachiCase #MadrasHC

    ×