search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் கார் மோதல்"

    கலசபாக்கம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள எள்ளுப்பாறையை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 41) செங்கல் சூளை நடத்தி வந்தார். பாடகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர்கள் 2 பேரும் நேற்று போளூர் செங்கம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட கமலக்கண்ணன், ரமேஷ் 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் போலீசார் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பெல்லியப்பா நகர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ரஞ்சித் நேற்று வீட்டிலிருந்து பைக்கில் வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ரஞ்சித் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×