search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராலயம்"

    • அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
    • பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பரபவனியும் , பல்வேறு அருட்தந்தை யர்களால் திருப்பலியும் தினம் ஒரு தலைப்புகளில் நிறைவே ற்றப்பட்டது. அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி கும்பகோணம் மதுரை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

    இத்திருப்பலியில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், மறை வட்ட முதன்மை குரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அமலவில்லியம், அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தை யர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவ டைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ண வண்ண மின்விளக்கு களாலும், மல்லிகை மலர்க ளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி புறப்பட்டது. இந்த தேர் பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    தேர்பவனி தொடங்கியதும் வாணவேடி க்கை நடந்தது.

    தேர் பவனி நிறைவடைந்ததும் இன்று காலை திருவிழா நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு, பூண்டி மாதா பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெற்றது.

    அன்னையின் பிறப்பு பெருவிழா தேர் பவனியை ஒட்டி பூண்டி மாதா பேராலயம், பேரால யத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையி லான குழுவினர் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது.

    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினந்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறார்கள்.

    ஆண்டுதோறும் வேளாங்க ண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உலகம் முழுவதில் இருந்தும் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த பத்து நாள் திருவிழாக்களில் மட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்.

    இதில் பலர் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் பங்கேற்பார்கள்.

    இதன்படி இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த விழாவில் பங்கேற்ப தற்காக கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

    இதன்படி தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களும் பாத யாத்திரையாக தஞ்சை வழியாக செல்ல தொடங்கி உள்ளனர்.

    மேலும் தஞ்சை நகரில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக சென்று உள்ளனர்.சிலர் சிறிய அளவிலான மாதா தேரை இழுத்தபடி செல்கின்றனர்.

    சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது.

    தஞ்சாவூர் கீழவாசல் புனித ஜெபமாலை மாதா கோயில் தெருவில் இருந்து 39 ஆவது ஆண்டாக வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவை காண பாதயாத்திரையாக பக்தர்கள் சப்பரத்துடன் சென்றனர்.

    இப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    • நாளை காலை ரெயில் புறப்பட்டு மறுநாள் இரவு வேளாங்கண்ணி சென்றடையும்.
    • அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை, செகந்திரபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண். 09047) புறப்பட்டு மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்க ண்ணியில் இருந்து 29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.09048) மறுநாள் மாலை 5.30 மணிக்கு மும்பை வதோதரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இதேபோல் செகந்திரா பாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07125) அடுத்த மாதம் ( செப்டம்பர்) 4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு வழிதடத்தில் வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07126) அடுத்த மாதம் 6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

    இதேபோல் செகந்தி ராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.07127) செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி காலை 8 .40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ( வண்டி எண்.07128) அடுத்த மாதம் 10-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்ற டையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
    • இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.முன்னதாக ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார்.தொடர்ந்து, புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

    தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.

    இன்று காலை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கும்பகோணம் காமராஜர் சாலை மற்றும் பேராலயத்தை சுற்றி கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    அதனை தொடர்ந்து மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார்.

    ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிலோமின்தாஸ் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மக்கள் கைகளில் தென்னங்குருத்தோலைகளை ஏந்தியவாறு பேராலயத்தை நோக்கி வந்தனர்.
    • பக்தர்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    பூதலூர்:

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தில் புக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.

    இன்று காலை பூண்டி மாதா மக்கள் மன்றத்திலிருந்து ஏராளமான மக்கள் கைகளில் தென்னங் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடல்களை பாடிய வண்ணம் பூண்டி மாதா பேராலயத்தை நோக்கி வந்தனர்.

    குருத்தோலை பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் குருத்தோலைகளுடன் நடந்து வந்தார்.

    குருத்தோலை பவனி பேராலயத்திற்குள் வந்ததும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    • தட்டு தடுமாறி செல்லும் வாகனங்கள்
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில் நகரின் பிரதான சாலையாக கருதப்படும் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.ஆனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாத அளவிற்கு பல்லாங்குழிகளாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலையில் செல்வோர் அவல நிலையை சொல்லி மாளாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களும் உள்ளது.

    இங்கு பொருட்கள் வாங்குவதற்காக குமரி மாவட டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஏராள மான பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.அவர்களும் இந்த சாலையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.இந்த சாலையின் வழியாகத்தான் அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. டிரைவர்கள் பஸ்களை இயக்க முடியாத நிலையில் இந்த சாலை பல்லாங்குழிகளாக உள்ளது.

    எனவே அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் இந்த சாலையில் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மோசமான சாலையின் காரணமாக தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.மிகப்பெரிய அளவில் விபத்துகள் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகராட்சி அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் ஒருபுறம் இருக்க சாலை விரிவாக்கத்திற்காக அந்த பகுதியில் உள்ள கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு மின்கம்பங்கள் மாற்றப்பட்டது.

    ஆனால் இன்னும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.எனவே சாலை பராமரிப்பின் போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்து தார்தளம் அமைத்து இருவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்துமே போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இருவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். எனவே முதல் கட்டமாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளையும் சேர்த்து தார்சாலை அமைத்து முதல் கட்டமாக இந்த சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது‌.

    மேலும் நாகர்கோவில் வேப்ப மூட்டில் இருந்து டதிபள்ளி செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சுற்றி செல்லும் நிலை உள்ளது.எனவே நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலை விரிவாக்க பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    • பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.
    • வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி -கொள்ளிடம்‌ ஆறுகளுக்கு இடையே அமைதியான சூழலில் அமைந்துள்ளது பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் இப்பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பெருவிழா தொடக்கத்தை ஒட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.

    பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட சிறிய தேரை பக்தர்கள் சுமந்து சென்றனர்.

    திருக்கொடி பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    பூண்டி அன்னையின் புகழ் பாடும் பாடல்களை பாடியவண்ணம், மரியே வாழ்க என்ற‌ வாழ்த்து முழக்கங்களுடன் கொடி ஊர்வலம் கொடி மரத்தை அடைந்தது.

    அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.

    கொடியேற்றியபோது அதிர்வேட்டுகள் முழங்கின.

    பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து பேராலயத்தின் எதிரில் உள்ள அரங்கில் சிறப்பு திருப்பலி மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற பொருளில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.

    பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மைகுரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அன்புராஜ், தாமஸ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் 8ம் தேதி மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய பூண்டி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர். 9ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருவிழா திருப்பலியை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவதுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியானமைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புதிய அதிபராக அங்குள்ள தியான மைய இயக்குனர் ஆக பணியாற்றிய சாம்சன் நியமித்து கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராக சாம்சன் பொறுப்பேற்றுக் கொண்டார். கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இதில் பல்வேறு பகுதியைச் சார்ந்த பங்குத் தந்தையர்கள் கலந்துகொண்டனர்.மாறுதலில் செல்லும் பாக்கியசாமி, பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குநர் ஆல்பர்ட், உதவி பங்குத் தந்தைகள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தைகள் அருளானந்தம், ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய அதிபர் சாம்சனை பூண்டிமாதா மக்கள் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    ×