search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
    X

    தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தொடங்கி வைத்தார்.

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

    • அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
    • பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பரபவனியும் , பல்வேறு அருட்தந்தை யர்களால் திருப்பலியும் தினம் ஒரு தலைப்புகளில் நிறைவே ற்றப்பட்டது. அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி கும்பகோணம் மதுரை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

    இத்திருப்பலியில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், மறை வட்ட முதன்மை குரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அமலவில்லியம், அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தை யர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவ டைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ண வண்ண மின்விளக்கு களாலும், மல்லிகை மலர்க ளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி புறப்பட்டது. இந்த தேர் பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    தேர்பவனி தொடங்கியதும் வாணவேடி க்கை நடந்தது.

    தேர் பவனி நிறைவடைந்ததும் இன்று காலை திருவிழா நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு, பூண்டி மாதா பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெற்றது.

    அன்னையின் பிறப்பு பெருவிழா தேர் பவனியை ஒட்டி பூண்டி மாதா பேராலயம், பேரால யத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையி லான குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×