தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சப்பரத்துடன் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது.
பாதயாத்திரையாக சப்பரத்துடன் சென்ற பக்தர்கள்.
பாதயாத்திரையாக சப்பரத்துடன் சென்ற பக்தர்கள்.
Published on

தஞ்சாவூர்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினந்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறார்கள்.

ஆண்டுதோறும் வேளாங்க ண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உலகம் முழுவதில் இருந்தும் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த பத்து நாள் திருவிழாக்களில் மட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்.

இதில் பலர் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் பங்கேற்பார்கள்.

இதன்படி இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த விழாவில் பங்கேற்ப தற்காக கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

இதன்படி தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களும் பாத யாத்திரையாக தஞ்சை வழியாக செல்ல தொடங்கி உள்ளனர்.

மேலும் தஞ்சை நகரில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக சென்று உள்ளனர்.சிலர் சிறிய அளவிலான மாதா தேரை இழுத்தபடி செல்கின்றனர்.

சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது.

தஞ்சாவூர் கீழவாசல் புனித ஜெபமாலை மாதா கோயில் தெருவில் இருந்து 39 ஆவது ஆண்டாக வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவை காண பாதயாத்திரையாக பக்தர்கள் சப்பரத்துடன் சென்றனர்.

இப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com