search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயர் பட்டியல்"

    • கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • நேர்காணல் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    சேலம்:

    கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர்கள் 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப் பட்டு, அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரி யாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

    அதன்படி, சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர் பணியி டத்திற்கு 18000 பேரும், 40 கட்டுனர்கள் பணியிடத் துக்கு 3000 பேரும் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பதாரர் களுக்கு விற்பனையாளர், கட்டுனர் பணி இடங்களுக் கான நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பரில் அழகா புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் 236 விற்பனையாளர்கள் 40 கட்டுனர் பணிக்கு தேர்வா னவர்கள் பெயர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தின் மூலம் இணையத ளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட் டுள்ளது. இதில் விண்ணப்ப எண், தேர்வர்கள் பெயர், பிறந்த தேதி இடம் பெற்றுள்ளது.

    ரேஷன் கடை விற்பனை யாளர், கட்டுனர் பணி இடத்துக்கு தேர்வானவர் களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

    • எமிஸ் தளத்தில் மாணவரது பெயர், தமிழ், ஆங்கில மொழிகளில் சரிபார்த்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டது.
    • அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இதற்கான பணி முழுமை பெற்றுள்ளது என்றனர்.

    திருப்பூர் : 

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் எமிஸ் எனும் கல்வி -மேலாண்மை தொகுப்பு இணையதளத்தில் பதியப்படும் தகவல்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் பெயர், தேதி உள்ளிட்ட விபரம், பதிவு செய்யப்பட்டது.

    பிளஸ் 1 மாணவர்களின் பெயர் பட்டியல் விபரம் சரிபார்த்து கூடுதல் தகவல்களை பதிவேற்ற தலைமையாசிரியர்களுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- 2022-23ம் கல்வியாண்டின் பொதுத்தேர்வு எழுதும், 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.எமிஸ் தளத்தில் மாணவரது பெயர், தமிழ், ஆங்கில மொழிகளில் சரிபார்த்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இதுதவிர மாணவர்களின் மொழிப்பாட விலக்கு, பயிற்று மொழி மாற்றம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிரந்தர பதிவெண் உள்ளிட்ட கூடுதல் விபரங்களும் பதிவு செய்யப்பட்டது.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இதற்கான பணி முழுமை பெற்றுள்ளது என்றனர்.

    • வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கீழக்கரை நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி கமிஷ னர் செல்வராஜ் கூறியதா வது:-

    கீழக்கரை நகராட்சியில் பொது மக்களுக்கு தேவை யான பல்வேறு அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வரி செலுத்த அறிவிப்பு கொடுத்தும், பணியா ளர்களும் நேரடியாக சென்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் அதிக பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தி னால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு வரியை அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பகிரங்கமாக பொது வெளியில் மக்களின் பார்வைக்கும் வைக்கப்படும். மேலும் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே திட்ட பணிகள் மேற்கொள்ள முடியும்.

    எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் நகராட்சி யில் செலுத்த முன்வர வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்த லாம்.தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×