search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தொழிலாளி"

    • கனகவல்லி அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கனகவல்லி (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில், வழக்கம்போல் நேற்று கனகவல்லி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் ஆற்றில் இறங்கி இறால் மற்றும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.

    இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
    • ஜூஸ் பாட்டிலில் விஷம் கலந்து குடித்து படுக்கையில் மூக்கு, வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.

    அவினாசி :

    கேரள மாநிலத்தை சேர்ந்த அவுசேக் மகன் பிஜு (வயது 42). இவரது மனைவி கவிதா (32). இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கவிதா அவினாசி கஸ்தூரிபாய் வீதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15ந் தேதி இரவு அதே பகுதியில் ஒரு நபருடன் பேசிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .மறுநாள் காலை 10 மணிவரை வெளியே வரா ததால் அக்க ம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியே பார்த்தபோது ஜூஸ்பா ட்டிலில் விஷம் கலந்து குடித்து படுக்கையில் மூக்கு, வாயில் நுரைதள்ளிய படி இறந்து கிடந்துள்ளார்.

    இதுகுறித்த புகாரின்பேரில அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து கவிதா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • உப்புபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, பாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). இவரது மனைவி பேச்சியம்மாள் (42) . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பேச்சியம்மாள் வெள்ளகோவில் அருகே உள்ள உப்புபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். பேச்சியம்மாள் மன சங்கடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று பேச்சியம்மாள் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து தண்டபாணி பேச்சியம்மாளை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்த போது பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×