search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூப்பந்து போட்டி"

    • மாணவர் சூப்பர் சீனியர் பிரிவில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.
    • மாணவியர் சூப்பர் சீனியர், ஜூனியர் பிரிவில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்கழுக்குன்றம் குறுவட்ட பள்ளிகள் இடையே பூப்பந்து போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டியை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவி வளர்மதி எஸ்வந்தராவ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோதண்டபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    மாணவர் சூப்பர் சீனியர் பிரிவில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளியும் முதலிடம் பிடித்தது.

    மாணவியர் சூப்பர் சீனியர், ஜூனியர் பிரிவுகளில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், சீனியர் பிரிவில் குழிப்பாந்தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தது.

    இப்பள்ளிகள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளது.

    • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது.
    • கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கப்பச்சி கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிபோட்டி நடந்தது.

    இதில் இளித்துறை அணிக்கும் கெங்கமுடி அணியும் மோதின. இந்த போட்டியில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டனர். அவருக்கு கிளப் சார்பில் மேளத்தளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளர்ச்சிக்காக ரூபாய்_25000 நிதி உதவி வழங்கினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனவரி 1-ந் தேதி மாலை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    இமாலயா விளையாட்டு குழு, திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட குழு சார்பில் 40 ம் ஆண்டு மாநில ஐவர் பூப்பந்து போட்டி 2 நாட்கள் திருப்பூரில் நடக்கிறது.வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதி, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இரு பாலருக்கான இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.போட்டிகளை எம்.பி., சுப்பராயன் தொடங்கி வைக்கிறார். இரண்டாம் நாள் போட்டியை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் தொடங்கி வைக்கிறார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனவரி 1-ந் தேதி மாலை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ×