search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பூப்பந்து போட்டி - 2 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் பூப்பந்து போட்டி - 2 நாட்கள் நடக்கிறது

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனவரி 1-ந் தேதி மாலை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    இமாலயா விளையாட்டு குழு, திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட குழு சார்பில் 40 ம் ஆண்டு மாநில ஐவர் பூப்பந்து போட்டி 2 நாட்கள் திருப்பூரில் நடக்கிறது.வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதி, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இரு பாலருக்கான இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.போட்டிகளை எம்.பி., சுப்பராயன் தொடங்கி வைக்கிறார். இரண்டாம் நாள் போட்டியை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் தொடங்கி வைக்கிறார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனவரி 1-ந் தேதி மாலை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×