search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமண தம்பதிகள்"

    • திருமணம் நடைபெறுகிற இடங்களுக்கே சென்று புதுமண தம்பதியருக்கு பரிசுத்தொகுப்பை வழங்கப்போகிறார்கள்.
    • ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது ஆரோக்கியமானது என்பது பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வையும் புதுமண தம்பதியருக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

    அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு தொகுப்பில் என்னவெல்லாம் இடம் பெறப்போகின்றன என கேட்கிறீர்களா?

    கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடும் கைப்புத்தகம், திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை இடம்பெறும்.

    இதுபற்றி ஒடிசா மாநில குடும்ப கட்டுப்பாட்டு இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறுகையில், "இந்த திட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் அங்கம் ஆகும். இதன் நோக்கம், புதுமண தம்பதியருக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்" என குறிப்பிட்டார்.

    இப்படி புதுமண தம்பதியருக்கு பரிசு தரப்போவது நாட்டிலேயே ஒடிசாவில்தான் முதல் முறையாக அரங்கேறப்போகிறது என்று தேசிய சுகாதார திட்டத்தின் ஒடிசா மாநில இயக்குனர் சாலினி பண்டிட் பெருமிதத்துடன் கூறினார்.

    திருமணம் நடைபெறுகிற இடங்களுக்கே சென்று புதுமண தம்பதியருக்கு இந்த பரிசுத்தொகுப்பை வழங்கப்போகிறார்கள்.

    ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது ஆரோக்கியமானது என்பது பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வையும் புதுமண தம்பதியருக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

    ஆக, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒடிசா இந்த வகையில் வழிகாட்டப்போகிறது.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுைர கோவில்களில் புதுமண தம்பதிகள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
    • இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

    மதுரை

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.

    ஆடி மாதத்தில் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை செய்வதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி ஆடிப்பெருக்கான இன்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலிகள் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

    மதுரையில் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான புதுமணத்தம்பதிகள் வந்திருந்தனர். அவர்கள் பொற்றாமரைகுளத்தில் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர். இதே போல் முத்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் புதுமண தம்பதிகள் வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை ஆற்றில் வழக்கமாக ஏராளமானோர் திரள்வது உண்டு.

    ஆனால் தற்போது மழை காரணமாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கு பூஜை நடத்த போலீசார் தடை விதித்ததோடு தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.

    மதுரையில் திருமணமான பெண்கள் பலர் வீடுகளில் வழிபட்டு தாலி பிரித்து புதியதை அணிந்து கொண்டனர்.

    • கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. சிறந்த பரிகார தலமாகவும் உள்ளது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து திதி, தர்ப்பணம் மற்றும் திருமண தோஷம் நீக்கும் பரிகாரங்கள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும். மேலும் ஆடி பிறப்பு மற்றும் ஆடி 18 நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அம்மாபேட்டை, பவானி, ஈரோடு மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் குளிக்கும் இடத்தில் உள்ள படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதனால் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொடுமுடி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பக்தர்கள் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ×