search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை கொள்ளை"

    • கோவில் கட்ட சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி புரம் வீதியில் சொந்தமான 100 ஆண்டு பழைமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது.

    அவ்வப்போது அரிமளத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதை வைரவன் வழக்கமாக வைத்துள்ளார்.

    அரிமளம் அருகே இசுகுப்பட்டி கிராமத்தில் வைரவன் குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் கோவில் கட்டுவதென்று வைரவன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதற்காக பணம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வைரவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. வீட்டில் அறையில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.11 லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசில் வைரவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

    • விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை.
    • வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரவன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40). விவசாயியான இவர் வழக்கம் போல தனது தாயுடன் இரவு உணவு உண்ட பின்பு, தூங்கி உள்ளார். வீட்டு வேலையை முடித்து கொண்டு தாய் அமராவதியும் படுத்து தூங்கி உள்ளார்.

    இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்த, நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைக்காமல் லாவகமாக திறந்த மர்மநபர், வீட்டுக்குள் புகுந்து உள்ளான். பின்னர் பீரோவை சத்தமில்லாம் உடைத்து திறந்து அதில் இருந்த 19 நகையை திருடி உள்ளான். திருடிய நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ணதாசனின் தாய், கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் திருடனின் கண்ணை உறுத்தி உள்ளது.

    இதனால் மீண்டும் கை அரிப்பு எடுத்தவனாய் தூங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் தாய் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை உணர்ந்த கண்ணதாசனின் தாய், விழித்தெழுந்து திருடனை பார்த்து சத்தமிட்டுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த மர்மநபர் பின்வாசல் வழியாக தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த கண்ணதாசனும், ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், நான்கு புறமும் திருடனை தேடி அலைந்து உள்ளனர். மேலும் அக்கிராமத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் தேடி அலைந்துள்ளனர்.

    விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை. எனவே இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

    வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆளில்லாத வீட்டில் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக உள்ள இந்நிலையில் தற்போது ஆள் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×