search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை விற்ற"

    • ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
    • சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாய்க்கால் பகுதியில் அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த நபர் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்த பொன்னான் என்ற பொன்னுசாமி (58) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது 12 மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் மளிகை கடையில் தாலுகா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடையின் உரிமையாளரான நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் (31) என்பவரை கைது செய்து கடையில் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களான அரசூர் ராஜா வீதியை சேர்ந்த ராஜ் மனைவி சுமதி (45), ராஜு வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ×