search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் தெரிவிக்கலாம்"

    • பதிவு செய்யப்படாத 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து ரேடால் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ரேடால் எலி மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்து விற்றால் கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்படாத 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து ரேடால் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிக நஞ்சுதன்மை கொண்டது. அபயாகரமானது.

    மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. எனவே, வேளாண் உளவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான ரேடால் என்ற எலி மருந்து மளிகை கடைகள், சூப்பர் மார்கெட் மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தினை பயன்படுத்த வேண்டாம் எனவும், திடீர் ஆய்வின் போது, ரேடால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற வழக்கு தொடரப்படும்.

    தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரேடால் எலி மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

    அதன்படி, பூச்சி மருந்து ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி -8248096799, காவேரிப்–பட்டணம் 9080300345, பர்கூ–ர் 9842603370, வேப்ப–னஹள்ளி 9003720549, மத்தூர் 6383310480, ஊத்தங்கரை 8248749452, சூளகிரி 9443207504, ஓசூர் 9626177886, கெலமங்கலம் 9385900350, தளி 8526809678 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை குறைந்துள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அதிக அளவில் மைனஸ் விலை கேட்பதால் தொழில் நடத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும் மைனஸ் விலையையும் அறிவித்து வருகிறது.

    தற்போது முட்டை விலை 460 காசுகளாக உள்ளது. அதன்படி, இன்று இந்த மைனஸ் விலை 30 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாளையக்காடு பகுதியில் ஆய்வு நடத்தினர்.
    • சாக்கடை கால்வாய் ஒன்று சேர்வதால், எந்த இடத்தில் சாயம் திறந்துவிடப்பட்டது என கண்டறியமுடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சர்ந்த சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்நிறுவனங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிவப்பு நிற பட்டியலில் வைத்துள்ளது. சாய ஆலை மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. சுற்றுச்சூழல் விதிகளை மீறும் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதியின்றி வாடகை வீடுகள், குடோன்களில் ரகசியமாக பட்டன் ஜிப் டையிங், டேபிள் பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை சாக்கடை கால்வாய் மற்றும் அருகிலுள்ள நீர் நிலைகளில் திறந்துவிடுகின்றனர்.ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, ரெயில்வே பாலம் பகுதி சாக்கடை கால்வாயில் நீல நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், பகல்வேளையிலேயே தைரியமாக சாயக்கழிவுநீரை திறந்து விடுவதை பார்த்து இயற்கை ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார் கூறியதாவது:- பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், மாசுகட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாளையக்காடு பகுதியில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள் சென்றபோது, சாயக்கழிவுநீர் நின்றுவிட்டது. மீண்டும், சூர்யா காலனி, கோல்டன் நகர் உள்பட அப்பகுதி முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. பொதுமக்களிடமும் விசாரித்தோம்.பல்வேறு பகுதி சாக்கடை கால்வாய் ஒன்று சேர்வதால், எந்த இடத்தில் சாயம் திறந்துவிடப்பட்டது என கண்டறியமுடியவில்லை. அப்பகுதியில் நிறுவனங்கள் இல்லை. வீடுகளில் வைத்து பட்டன் ஜிப் டையிங் அல்லது டேபிள் பிரின்டிங் இயக்கி, சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம்.பாளையக்காடு சுற்றுப்பகுதிகளில் தினமும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். சாயக்கழிவுநீரை திறந்து விடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டால்,0421 2236210என்கிற எண்ணில், பொதுமக்கள் உடனடியாக மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார். 

    ×