search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "can complain"

    • சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.
    • சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:-

    சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க கால்நடைகளை சாலைகளில் விடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதையும் மீறி சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 70 மாடுகளுக்கு ரூ.63 ஆயிரத்து 260 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகிறது. மாடுகளின் ஒரு கொம்பில் மட்டும் சிவப்பு வர்ணம் பூசி அடை யாளம் காட்டப்படுகிறது.

    இந்த மாடுகள் பிடிபட்டால் நகராட்சி மூலம் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிப்பதோடு அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை குறைந்துள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அதிக அளவில் மைனஸ் விலை கேட்பதால் தொழில் நடத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும் மைனஸ் விலையையும் அறிவித்து வருகிறது.

    தற்போது முட்டை விலை 460 காசுகளாக உள்ளது. அதன்படி, இன்று இந்த மைனஸ் விலை 30 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    ×