search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளக்ஸ் பேனர்"

    • அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வாசுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி பெற்று, கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரையூர் அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.

    இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது தூரம் தள்ளி வைத்தோம். இதற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் எதிர்தரப்பினர் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர். ஏற்கனவே அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சமூக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேனர் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன்.
    • தென்காசி தாலுகா அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்னும் விவசாயி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை வழங்கினார்.

    அதில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன். பலமுறை தென்காசி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு சென்று கோரிக்கையை தெரிவித்தும் இன்று வரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்காத காரணத்தினால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 18-ந்தேதி தென்காசி தாலுகா அலுவலகத்தில் எனது புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் ஒரு வார காலம் வைத்துக்கொள்ள அனுமதியும், எனக்கு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    அவர் அனுமதி கேட்ட பிளக்ஸ் பேனரில் தென்காசி வட்டம் வடக்கு பாப்பான்குளத்தில் இடத்தை சர்வே செய்வதற்கு அரசுக்கு பணம் செலுத்தி இருந்தேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசு பணியை செய்கின்ற சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன் என்று எழுதி வைக்கப்போவதாக அவர் கூறினார்.

    • பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்படுவதால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.
    • 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தளி ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில், விதிமீறி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், கவனச்சிதறல் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள், காற்றுக்கு தாங்காமல் பொதுமக்கள், வாகனங்கள் மீது விழுந்தும் விபத்தை ஏற்படுத்தி வருகிறது.விதி மீறல் பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நகராட்சி சார்பில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பஸ் நிலையம், அனுஷம் ரோடு, பைபாஸ் மற்றும் கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர். நகராட்சி சார்பில், பஸ் நிலையத்தை சுற்றிலும் இருந்த பிளக்ஸ் பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன.தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, கொல்லன் பட்டறை, பழநி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் அதிக அளவு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், ஆபத்தான முறையில் உள்ளன. அவற்றையும் முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.விதி மீறி கட்டடங்கள் மீதுள்ள விளம்பரத்தட்டிகளையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதிக்குள் பிளக்ஸ் பேனர்கள், ரோடுகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள், ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் அகற்றப்படும் என்றனர்.

    ×