என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்"

    • பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார்.
    • பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.

    பிரான்சில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

    இதற்கிடையே கடந்த அக்டோபர் 5 அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இதனால் பிரதமராக செயல்பட்ட பதவியை ராஜினாமா செய்வதாக அக்டோபர் 6 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் பிரான்சின் பிரதமராக செபாஸ்டியன் லு கார்னௌயில் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராஜினாமா செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு லு கார்னௌயில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருகிறார் . கடந்த சில நாட்களாக மேக்ரோன் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள லு கார்னோ , அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தனது கடமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.

    ஜூன் 2024 இல் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்து பிரான்ஸ் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.

    அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் பிரான்சின் வளர்ந்து வரும் கடனை நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

    இதற்கிடையில், முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளன.

     அதேவேளை, லு கார்னோவில்லின் மறு நியமனம், 2027 வரை நீடிக்கும் தனது அதிபர் பதவியை இழப்பதைத் தவிர்ப்பதற்கான மேக்ரோனின் கடைசி முயற்சியாகக் கருதப்படுகிறது.  

    • தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்.
    • குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.

    நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து, பார்வையாளர் அரங்கில் இமானுவேல் மேக்ரானை வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் அதிபர், "இந்நிகழ்வு பிரான்ஸ்-க்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நன்றி இந்தியா" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ×