search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிட்காயின்"

    தடை செய்யப்பட்ட பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன் பெங்களூருவில் அனுமதி இன்றி பிட்காயின் ஏ.டி.எம். அமைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். #Bizmanheld #BitcoinATM #BengaluruBitcoinATM
    பெங்களூரு:

    இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது. பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்கவோ, இதர சேவைகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

    பிட்காயின் என்பது கள்ளச் சந்தையில் பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பணம் ஆகும். இதனை கண்டறிந்தவர் மற்றும் அவரது பின்புலம் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 16,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,31,728 வரை உயர்ந்ததே, பிட்காயின் திடீர் டிரென்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது.
     
    இணையத்தில் மொத்தம் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் புழக்கத்திற்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றது. எனினும் இத்தகைய பிடிகாயின்களை விநியோகம் செய்ய 2140-ம் ஆண்டு வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் இணையத்தில் மொத்தம் 1.67 கோடி பிட்காயின்கள் புழக்கத்திற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    கள்ளச்சந்தையில் இணைய பரிமாற்றங்களின் போது இதுவரை 9,80,000 பிட்காயின்கள் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு திருடர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1500 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிகளை (967245000000) தொடுகிறது.

    ஒரே ஆண்டில் 1700 சதவீதம் உயர்ந்த பிட்காயின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி நிலவரப்படி 17 ஆயிரத்து 752 டாலர்களாக அதிகரித்தது. அந்த மாதத்தில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துமக்கூரு நகரை சேர்ந்த பட்டதாரியான ஹரிஷ் என்பவர் ‘அன்காயின் டெக்னாலஜிஸ்’ என்னும் நிறுவனத்தை தொடங்கி, இணையத்தின் மூலமாக பிட்காயின் பரிவர்த்தனைகளை செய்து வந்தார்.

    மேலும், ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை மீறிய வகையில் பெங்களூரு நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் அனுமதியின்றி பிட்காயின் ஏ.டி.எம். ஒன்றையும் கடந்த வாரம் ஹரிஷ் திறந்துள்ளார்.

    இதை தொடர்ந்து பெங்களூரு போலீசார் நேற்று ஹரிஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரித்து வருகின்றனர். #Bizmanheld #BitcoinATM #BengaluruBitcoinATM
    நெதர்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை கொண்டு யூரோக்களை க்ரிப்டோகரென்சிகளாக மாற்ற முடியும்.




    நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

    சோதனை அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு நிறுவப்பட்டிருக்கும், இந்த ஏடிஎம் பயணாளிகளின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் நீ்ட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஐரோப்பியாவில் இது போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தெரிவித்திருக்கிறது. 

    ஸ்கிபோல் விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர் தன்ஜா டிக் கூறும் போது, “பயணாளிகளுக்கு தலைசிறந்த சேவையை வழங்க ஸ்கிபோல் தொடர்ந்து புதுவித மற்றும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சிக்கிறது என தெரிவித்தார். 
    “பிட்காயின் ஏடிஎம் மூலம் பயணர்கள் தங்களின் யூரோக்களை சர்வதேச க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். இது பலருக்கும் பயன்தரும் வகையில் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 



    புதிய ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் பிவி (ByeleX Data Solutions BV) எனும் தட்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது.

    உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலிய விமான நிலையம் அறிமுகம் செய்தது. மே மாத வாக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. 

    பல்வேறு வியாபார நிறுவனங்களும் விர்ச்சுவல் கரென்சிக்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், க்ரிப்டோகரென்சிக்களை கொண்டே உலகை சுற்றி வருவது மிகவும் எளிமையாகிவிட்டது.
    பிட்காயின் மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர். #Bitcoin #ShilpaShetty
    மும்பை:

    ஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    இதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    இதன் அடிப்படையில், விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராஜ் குந்த்ரா நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
    ×