search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடி உஷா"

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியிட்டார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி இன்று தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை
    • பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.

    தலைவர், துணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
    • எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி.உஷா டெல்லி மேல் சபையின் நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் அவருக்கு நியமன எம்.பி. பதவி கிடைத்து இருப்பதால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவியது.

    இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர் விமர்சித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்து பி.டி.உஷா கூறியதாவது:-

    எனக்கு விளையாட்டு பிடிக்கும். விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை.

    பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

    எம்.பி.யானால் நான் டெல்லியிலேயே இருக்க மாட்டேன். நான் நடத்தி வரும் பள்ளியை விட்டுவிட முடியாது.

    அதே நேரம் விளையாட்டிற்கும், பொது சேவையிலும் என்னால் முடிந்ததை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பி.டி.உஷா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
    • பாராளுமன்ற விவாதங்களில் பி.டி.உஷா பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள்.

    பாராளுமன்ற விவாதங்களில் அவர் பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×