search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிபி"

    • இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது.
    • இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தியின் பரிந்துரைப்படி இந்த போட்டி தற்போது இரு நாடுகளில் நடத்தப்படுகிறது.

    ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படுகிறது.

    இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள ஜாகா அஷ்ரப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது. எனக்கும் இது பிடிக்கவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானிடம் இருப்பதால் போட்டி முழுவதையும் பாகிஸ்தானிலேயே நடத்தும் வகையில் இன்னும் அதிக முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அதுவும் இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

    ஆனால் ஆசிய கோப்பை போட்டி குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் இனி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும். அதற்கு இடையூறு செய்ய மாட்டேன்' என்றார்.

    • வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஆலன் டொனால்ட் செயல்பட்டு வருகிறார்.
    • இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது.

    வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் எதிர்வரும் 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக டொனால்ட் நியமிக்கப்பட்டார். இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது. பின்னர் பிசிபி தனது ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் வரை நீட்டித்தது.

    இந்தியாவுக்கு எதிராக வங்காள தேச அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் டொனால்டின் ஒப்பந்தம் உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிசிபி கிரிக்கெட் இயக்கத் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    ×