என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் கல்வி"
- சிறுவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
- மேல்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
'போக்சோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமின் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சிறுவனுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பரபரப்பு கருத்துகளையும் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு 9-ம் வகுப்பில் இருந்து இல்லாமல், மிக இளம் வயதில் இருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மேல்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
அப்போதுதான், பருவம் வந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து இளம் பருவத்தினர் தெரிந்து கொள்ள முடியும். அதுதொடர்பாக செலுத்த வேண்டிய கவனமும், பின்பற்ற வேண்டிய எச்சரிக்கையும் தெரிய வரும். உரிய அதிகாரிகள், இதில் தங்களது மனதை செலுத்தி, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- நடத்தைகளில் பல வகை உள்ளன.
- பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.
பெண்ணை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது... இதுபோன்ற செயலினால் பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை `ஸ்டாக்கிங்' என்கிறார்கள். இம்மாதிரியான நடத்தைகளில் பல வகை உள்ளன. பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு செய்வதும் உண்டு. அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம்.
இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார். தனக்குக் கிடைக்காத ஒரு பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பொறுமுகிறார். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.
இன்னொருபுறம், பெண்களை பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. கோரிக்கை மறுக்கப்படும்போது, அந்த பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.
பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாகவோ அல்லது வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாகவோ அணுகுவதும் தவறு.
மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது? என்று இனம் காண்பது இதில் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்ந்த உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோரும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறார்கள். இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாத ஒன்றாகிறது.
- புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும்.
- பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரளாவில் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில், பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மறுசீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும்.
புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும். பாடத்திட்டத்தில் தலைப்பைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். தற்போது, பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்காததால், பல பிரச்னைகள் காணப்படுகின்றன.
பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது. ஆனால் அதை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது. இந்த இயக்கத்தில் மற்ற பிறரின் முடிவு மிகவும் முக்கியமானது என்றார்.






