search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசனத்திற்காக"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்ற ப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,039 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, காலிங்கராயன் பாசனத்தி ற்கு 600 கன அடி,

    குடி நீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.56 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.54 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.51 அடியாக உள்ளது.

    மழை ப்பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் அதிக அளவில் வெளி யேற்றப்பட்டு வருவதாலும் ஈரோடு மாவட்ட அணை களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடி வாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.

    42 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மூலவா ய்க்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அணை நிரம்பி உபரி நீரானது நேற்றைய நிலவரப்படி 8 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொ டர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தன கிரி விவசாயிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அணையில் இருந்து இடது மற்றும் வலது என இரு மதகுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விட்டனர்.

    இன்று முதல் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளதாகவும், இரு வாய்க்கால்களிலும் வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    • அணையின் நீர்மட்டம் 89.63 அடியாக குறைந்து உள்ளது.
    • அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.63 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,156 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் காளிங்கராயன் பாசனத்தி ற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×